தமிழ் தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – நாளை அறிவிப்பு!

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடை தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை (24) அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) மாலை யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தன.

இதன் போது நாளைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடை தொடர்பாக நீதிமன்ற மீளாய்வு கட்டளை வழங்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த கட்டளையின் பின்னர் அன்று மாலை தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் கூடுவதறகும் தீர்மானித்துள்ளன.

இவ்வாறு நாளையதினம் கூடுகின்ற போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னர் அதனை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தப்படுமென்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.