பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலான ரொஹா பலி!

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல்ட் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் இன்று அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். 


இன்று அதிகாலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


குறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 இலட்சம் இந்திய ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த நபர் பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.