வரலாற்றில் இன்று- (24/09/2020)

 நிகழ்வுகள்

  • 622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா).
  • 1664 – நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
  • 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
  • 1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
  • 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
  • 1840 – இலங்கை வங்கி அமைக்கப்பட்டது.
  • 1841 – புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.
  • 1869 – கறுப்பு வெள்ளி: ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
  • 1898 – யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது.
  • 1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
  • 1948 – ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
  • 1973 – கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1979 – உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
  • 1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1902 – ருஹொல்லா கொமெய்னி, ஈரானிய அரசியல்வாதி (இ. 1989)
  • 1936 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (இ. 2013)

இறப்புகள்

  • 2006 – பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)
  • 2009 – நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)

சிறப்பு நாள்

  • கினி பிசாவு – விடுதலை நாள் (1973)
  • ட்றினிடாட் மற்றும் டொபாகோ – குடியரசு நாள் (1976)


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.