“20”க்கு சுதந்திர கட்சி ஆதரவு!

 

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, ஏனைய பதவிகளையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.