சுமனரத்ன தேரரை கைது செய்ய கூட்டமைப்பு கோரிக்கை!

 

மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் சுமனரத்ன தேரரை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் (23) தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமனரத்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.