NEW DIAMOND தீ விபத்து - 442 மில்லியன் நட்ட ஈடு வழங்க முடிவு!

 


NEW DIAMOND கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் 442 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. 


இலங்கை கடல் எல்லையில் தீப்பற்றி விபத்திற்குள்ளான MT NEW DIAMOND கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்த 442 மில்லியன் ரூபா முழுமையான நட்ட ஈட்டுத் தொகையை விரைவில் வழங்க அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் சட்டத் தரணிகள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக சட்டத்தரணியின் இணைப்பாளரான அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 


ஆரம்ப கட்ட கட்டணத் தொகையாக இதற்கு முன்னர் நீதிபதியினால் 340 மில்லியன் ரூபா மதிப்பீடாக முன்வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் இறுதியான மதிப்பீடு அண்மையில் இடம்பெற்ற போது, மேலும் 100 மில்லியன் உள்ளடக்கப்பட்டு 442 மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.