பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி – 29 பேர் கைது!

 


பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய 29 பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பயங்கரவாத தடுப்பு விசாரணைக் குழு (Le parquet national antiterroriste (PNAT)) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

26 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வழங்கிய நிதியினால் ஐல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் (Al- Qaeda,  Islamic State (IS) பயனடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 அத்துடன், குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இரண்டு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். Mesut S. மற்றும்  Walid F. ஆகிய 25 வயதுடைய இரு பயங்கரவாதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.