யேர்மனி பீலவில்ட் நகரில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட 94 பேருக்கு கொரோனா இருப்பதாக கண்டுபிடிப்பு!

 


யேர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld  என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட  பனிப்புலம் மக்கள் 94 பேருக்கு கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மக்களின்  விழிப்புணர்வுக்காகவும். அவர்களது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் இச் செய்தியை பிரசுரிக்கின்றோம்.

யேர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld  என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்களுக்கு 94பேர்வரை கொரோனா தொற்றுநோய் இருப்பது சுகாதாரப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற. செய்தியை அங்கிருக்கும் மக்கள் அறியத்தந்துள்ளார்கள்.


தயவு செய்து இந்த நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட மக்கள்  தங்களை கொரோனா பரிசோதனைக்கு உடனடியாக உட்படுத்துமாறு சுகாதாரப்பிரிவு கேட்டுள்ளதாக. அந்நகர வானோலிகள் அறிவித்துக்கொண்டிருக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.