பிரான்சில் ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 நேற்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை கிறித்தைல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றது.
பொதுச் சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 27.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை