கேட்பதை கொடுக்கும் காமதேனு வழிபாடு!!


தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடந்த போது அதிலிருந்து பல பொருட்கள் தோன்றினர் .அதில் ஒன்றுதான் காமதேனு . 


காமதேனு என்பது தேவலோகத்தில் வசிக்கின்ற பசு .யார் அதனிடம் என்ன கேட்டாலும்  

அதை கொடுக்கும் சக்தி  படைத்தது .இது பெண்ணின் தலை ,மார்பு ,பசுவின் உடல் ,மயில் 

தொகை போன்றவற்றுடன் இருக்கும் .


கெளசிகன் என்ற மன்னன் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது . பசி பிணியை போக்கும் பொருட்டு,வசிஷ்டர் முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் காமதேனுவின் தங்கை நந்தினி பசுவை கேட்கிறான். வசிஷ்டர் தர மறுக்கிறார் . முனிவரிடம் போர்தொடுத்து தோல்வி அடைந்தான் .பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி கட்டுப்படும் என்பதால் தவம் இருக்கிறான் மன்னன் .சத்திரிய குலத்தில்  பிறந்தவர்கள் பிரம்மரிஷி பட்டம்  பெற முடியாது என்று வசிஷ்டர் கூறுகிறார்.நான் வாங்கி  காட்டுகிறேன் என்று மன்னர் சவால் விடுகிறான்.


ஆட்சியை துறந்து கடுமையான தவம் இருந்து நம் அம்மை அப்பனான பார்வதி ,பரமேஸ்வரனிடம் 

 பிரம்மரிஷி பட்டத்தை   பெறுகிறார் .


அந்த மன்னன் தான் நமக்கு காயத்திரி மந்திரத்தை தந்த 

விஸ்வாமித்திரர்.


கேட்டது கிடைக்க காமதேனு காயத்திரி மந்திரம் :


மந்திரங்களை ஜெபம் செய்து  உச்சரிக்கும் போது  ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும்.


ஓம் சுபகாமாயை வித்மஹே

காமதாத்ரை ச தீமஹி

தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்


- இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வந்தால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்.


விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006,

www.bairavafoundation.org

www.swarnabhairavapeedam.org

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.