கொங்கோவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 50பேர் உயிரிழப்பு!

 


கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கில் உள்ள கமிட்டுகா அருகே தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 50பேர் இறந்திருக்கலாம் என்று உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெட்ராய்ட் சுரங்கத் தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் பலத்த மழையைத் தொடர்ந்து இந்த தற்காலிக சுரங்கம் இடிந்து வீழ்ந்ததாக பெண்கள் ஆதரவு மற்றும் சமூக மேற்பார்வையின் முன்முயற்சியின் தலைவர் எமிலியன் இடோங்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாகாண ஆளுநர் தியோ நங்வாபிஜே காசி கூறுகையில், ’50 பேரின் துயர மரணங்களில் பெரும்பாலோர் இளைஞர்கள்’ என கூறினார்.

கமிட்டுகா மேயர் அலெக்ஸாண்ட்ரே பூண்டியா, இந்த விபத்துக்கு பெய்த மழையால் ஏற்பட்ட மண்சரிவே காரணம் என கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டு நாட்கள் துக்க தினத்தை அறிவித்த அவர், உடல்களை தரையில் இருந்து பிரித்தெடுக்க உதவுமாறு உள்ளூர்வாசிகளை வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் புகைப்படங்களும் காணொளிகளும் அந்த இடத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் காட்டின.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.