பிறேம்லால் நாடாளுமன்ற வருகை குறித்து வாசுதேவ கருத்து!

 


பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு நுழைவாரா இல்லையா என்பதைப் நாடாளுமன்றமும் சபாநாயகரும் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கு அமைவாகவே சட்டமா அதிபர் இவ் அறிவித்தலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.