பிரதமர், புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கு பாராட்டு!!

 


வடக்கு- கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும், கனடா தமிழ் முதலீட்டாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு- கிழக்கு மக்களை, தொழில் ரீதியாக உள்வாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்தச சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துக்கொண்டிருந்தார்.

இதன்போது பிரதமர், தற்போது நாட்டிலுள்ள சூழ்நிலையில் வடக்கு- கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப்பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத்தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  உறுதியளித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.