நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு!!
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்திருந்தன.
இதேவேளை, தடை உத்தரவு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்குத் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பாக கலந்துரையாடியிருந்தன. இதன்போதே நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இன்று மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என 9 தமிழ்த் தேசிய அணிகள் கலந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை