மாரடைப்பால் மரணமடைந்தார் நகைச்சுவை கலைஞர் 'வடிவேல் பாலாஜி' !!

 


வடிவேல் பாலாஜி (42 வயது) 5 வருடங்களுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் மாரடைப்பு ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கே வைத்தியச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போக, இன்னொரு தனியார் வைத்தியசாலைக்குச் சென்றவர்கள், அங்கும் சரிவர பார்க்கமுடியாமல், அரச வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார் பாலாஜி.


”பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பிணவறையில் பிரேத பரிசோதனை பிரிவிர் வேலை பார்த்தார். அங்க வேலை பார்த்துக்கிட்டே ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சார். எப்படி அங்க பிணங்களை பிரேத பரிசோதனை பண்ணிட்டே இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்கார்னு ஆச்சர்யமா இருக்கும்.


வடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி அப்படியே பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல செமையா கலாய்ச்சி வித்தியாசமா பண்ணி எல்லோரையும் சிரிக்கவெச்சிடுவார். அப்படித்தான் பாலாஜி அதிகமான மக்களை ரசிக்க வச்சார்.


இரண்டு வாரங்களுக்கு முன்னாடி ரெண்டாவது ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அப்ப கையும் காலும் பேரலைஸ் ஆகிடுச்சு. காசு பிரச்னையால் தொடர்ந்து மருத்துவமனைகளை மாத்திக்கிட்டே இருக்கவேண்டியதா இருந்தது. இன்னைக்கு காலைல அரசு மருத்துவமனையில உயிர் பிரிஞ்சிடுச்சு” என்றார் ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியின் இயக்குநரும், பாலாஜியின் நண்பருமான தாம்சன்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.