நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.
குடிநீரை விநியோகிக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாகவே நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை