ஷின்ஜியாங்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

 


சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் பிற சரக்குகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என அமெரிக்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தின் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் இந்த பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டுமென மனித உரிமை குழுக்கள் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியது.

இந்த நிலையில் இத்தடையினை அமெரிக்கா விதித்துள்ளது. ஷின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து சீன அரசுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களில் சமீபத்திய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

முறையற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் முறைகளை உள்ளடக்கிய உழைப்பு மூலம் உருவான பொருட்களை அமெரிக்க வினியோகச் சங்கிலியில் நுழைவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த தடையின் தாக்கங்கள் சீனாவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

உலகின் பருத்தி உற்பத்தியில் சீனாவின் பங்கு சுமார் 20 சதவீதம். அதில் பெரும்பாலானவை அதாவது 80 சதவீத பருத்தி ஷின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுபவை.

சீன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோகெமிக்கல் மற்றும் பிற மூலப்பொருட்கள் கிடைக்கும் முக்கியமான இடமாக இந்த மாகாணம் இருக்கிறது. ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் சுமார் 45 சதவீதம் பேர் வீகர் இனத்தவர்கள்.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கூறி 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீகர் இன முஸ்லிம்களை ஷின்ஜியாங் மாகாணத்தில் சீனா தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சீனா மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.