A.R ரஹ்மானுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

 


வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

வெளிநாட்டு செல்போன் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்தின் செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. அந்நிறுவனத்திற்கு இசையமைத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு வரி செலுத்தவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 இலட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர்.ரஹ்மான். மீது வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.