பெலரஸில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கைது!

 


ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பெண்களை தலைநகர் மின்ஸ்கில் பெலரஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பெலரஸை 26 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஜனாதிபதி லுகாஷென்கோ, ஓகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.


ஆனால் இதன் விளைவாக இடம்பெற்ற ஆரம்ப ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறை மக்கள் கோபத்தைத் தூண்டியது.


இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாக போராட்டம் நடைபெறவுள்ளது.


நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது மொத்தமாக 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்ற போதும் பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.