கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!


நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,350ஆக அதிகரித்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மேலும் ஒருவர் பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியநிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 25 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.