கழுத்துறையின் அடுத்த பிரதேசத்திற்குள் புகுந்த கொடிய மிருகம்: மக்களிற்கு எச்சரிக்கை

 களுத்துறை – ஹொரண மில்லனிய பிரதேசத்தில் அண்மையில் மக்களை அச்சுறுத்திவந்த  நரிக்கூட்டம் தற்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓவிட்டியாகம பிரதேசத்தில் நுழைந்திருக்கின்றன.


இதன் காரணமாக அந்த பிரதேசத்திலுள்ள மக்களும் அச்சத்தில் உறைந்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


கடந்த மாதத்தில் ஹொரண மில்லனிய பிரதேசத்தில் பைத்தியம் பிடித்த நரிகள் கடித்ததில் இருவர் பலியாகியிருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.


இந்த நிலையில் ஓவிட்டியாகம பிரதேசத்திலும் அப்படியான விசர் நரிக்கூட்டம் நடமாடி வருகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


குறித்த பிரதேசத்திலுள்ள ஒருவரை நேற்று முன்தினம் இரவு நரியொன்று வீடு புகுந்து கடிக்க முயுற்சித்துள்ளது,


இதன்போது தடியொன்றில் அந்த நபர் தாக்கியதில் நரி இறந்துள்ளது.


அடுத்தநாள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற இறந்த நரியின் தலையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த நரி விசர்பிடித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.


இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மக்கள் இரவில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.