ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம்.

 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இன்று(24) காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் 4.2 ரிக்டரளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் 4.3 ரிக்டரளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  எனினும் இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.