பர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்


 பர்மிங்காம் நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் நகர மையத்தில் கத்திக்குத்து இடம்பெற்ற தகவலையறிந்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் ஸ்னோ ஹில் பகுதியில் மற்றும் பர்மிங்காமின் ஆர்கேடியன் மையத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பகுதிகளும் அரை மைல் தொலைவில் உள்ளன.

ஆர்கேடியன் மையத்திலிருந்து ஒரு குறுகிய நடைப்பயணமான இர்விங் வீதியில் ஒரு தடயவியல் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையினை தொடர்புக்கொண்டோம். சிறிது நேரத்தில் இந்த பகுதியில் பல கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

காயமடைந்த பலரைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் தற்போது எத்தனை அல்லது எவ்வளவு தீவிரமான காயங்கள் என்று சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.

இருப்பினும், அனைத்து அவசர சேவைகளும் சம்பவ இடத்தில் ஒன்றாக வேலை செய்கின்றன, மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்கிறது.

என்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் எதையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிது நேரம் ஆகலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்த பொலிஸார், ‘ஆரம்ப கட்டத்தில் சம்பவத்தின் காரணங்கள் குறித்து ஊகிப்பது பொருத்தமானதல்ல’ என கூறினர்.

இந்த தாக்குதலை மிகப்பெரிய சம்பவம் என்று கூறியுள்ள மிட்லான்ட்ஸ் பொலிஸார் மக்கள் அமைதி காக்க வேண்டும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.