கரீபியன் பீரிமியர் லீக் ரி-20யில் பார்பாடோஸ் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி!


 கரீபியன் பீரிமியர் லீக் ரி-20 தொடரின் 28ஆவது லீக் போட்டியில், பார்பாடோஸ் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ட்ரினிடெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜமைக்கா தலாவாஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பிளக்வுட் 74 ஓட்டங்களையும், ரஸ்ஸல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், ஜோசுவா பிஷோப், ஹோல்டர், ரஷித் கான் மற்றும் ஹெய்டன் வோல்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்த்தது. இதனால், பார்பாடோஸ் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ஹோல்டர் 69 ஓட்டங்களையும், ஜோனாதன் கார்டர் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 1 விக்கெட்டினையும், 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜேஸன் ஹோல்டர் தெரிவு செய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.