கொரோனா பாதிப்பு - உலகளவில் மூன்று கோடியைக் கடந்தது!!


 உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்று காரணமாக 3 இலட்சத்து 7 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 ஆயிரத்து 911ஆக பதிவாகியுள்ளது.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 220 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 44 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 72 இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  அவர்களில் 61 ஆயிரத்து 221  பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இந்த தொற்றில் இருந்து மொத்தமாக 2 கோடியே 17 இலட்சத்து 92 ஆயிரத்து 894 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த கொடிய வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக தொடர்ந்தும்  அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஸ்யா ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அங்கு இதுவரை 68 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன், 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் நாளாந்தப் பாதிப்புகளில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது. அதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மொத்த பாதிப்பு 51 இலட்சத்தைக் கடந்து, 51 இலட்சத்து 15 ஆயிரத்து 893 ஆக பதிவாகியுள்ளது.

இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 1,139 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



அதேநேரம் இந்த வைரஸ் காரணமாக பிரேஸிலில் 44 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், ஒரு இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.