பங்களாதேஷ் பிரச்சினையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- நாமல்!

 


கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் கிரிக்கெட் வீரர்கள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என இலங்கை கூறியமைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இந்நிலையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்களாதேஷ் பிரச்சினையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை, (எஸ்.எல்.சி) பங்களாதேஷுக்கு  அறிவித்துள்ளது.


இருப்பினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதன்படி இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட்டு சபைக்கு இடையே இரண்டு விதமாக கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ, தனது ருவிட்டர் பக்கத்தில், “இலங்கை கிரிக்கெட் சபை இந்த விவகாரம் தொடர்பாக  கொவிட்-19 தடுப்பு பணிக்குழுவுடன் விவாதித்து, பங்களாதேஷ் பிரச்சினையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என பதிவேற்றியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.