வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல!!


அவர் இறந்து விட்டார்


அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

.

மெல்ல எட்டிப் பார்த்தேன்

மூச்சு இல்லை – ஆனால்

இப்போதுதான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!! 

.

இருபது வருடங்கள்

முன்னாடி – அவர் மனைவி

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!

என்று யாரும் கேட்காத

நேரத்தில் – அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது

அவர் இறந்திருந்தார் அப்போதும்

யாருமே கவனிக்க வில்லை...!!

.

தாய்க்குப் பின் தாரம்

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!!

என்று வாழ்ந்த போது – அவர்

இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!!

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!

.

என்னங்க...!!!

ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!

என்று காதிலே விழுந்த போதும்

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!!

.

உனக்கென்னப்பா...!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை

என்று வாழ்த்துவது போல

கிண்டலடிக்கப் பட்ட போது

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்...

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!

.

இல்லையேல்...!!!!

.

உங்கள் அருகிலேயே

இறந்து கொண்டிருப்பார்கள்

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது

வாழ்வது மட்டுமல்ல..!!!

வாழ வைப்பதும்தான் ..!!!!


பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.

வி.ச.செம்மேனிநாதன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.