ஜனாதிபதி செயலகத்துடன் நீங்களும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத்துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்தில்கொண்டு, அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை