சற்றுமுன் 17 பேருக்கு தொற்றியது!

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (14) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக உயர்ந்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.