யாழில் 173 பேருக்கும், கம்பஹாவில் 101 பேருக்கும் தொற்று இல்லை!

 சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு காெரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான திவுலப்பிட்டிய பெண்ணின் மகளான, கொரோனா தொற்றுக்கு உள்ளான 16 வயது மாணவியின் பாடசாலையில் 101 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.