வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!!
வவுனியா, வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமல் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றையதினம்
விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களே இவ்வாறு தங்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஜோர்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், 182 பேர் அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 1102 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை