நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்...


 இலங்கையில் நேற்றைய தினத்தில் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில், குவைட், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.