பூகொட பொலிஸாரின் காவலிலிருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

 கைதான நிலையில் பூகொட பொலிஸாரின் கண்காணிப்பிலிருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பூகொட பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ராகமமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.