மன்னாரில் பொலிஸ் வாகனம் மோதி மூவர் காயம்!



மன்னார் பாஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உற்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன் அவருடைய மனைவி மற்றும் ,அவர்களுடன் சென்ற 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தினை ஓட்டிச் சென்ற பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.