26 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் டோஹா கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவு செய்த மேலும் 66 பேர் இன்றைய தினம் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அதன்படி இதுவரையில் இலங்கையில் 53,937 பேர் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்து இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை