டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட இந்தியர் உயிரிழப்பு!

 அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட இந்தியா தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார்.

இவரது இந்த செயல் மிகவும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து அவர் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்து, உயிர் இழந்துள்ளார்.

இது குறித்து அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், வழக்கம் போல காலையில் எழுந்தார், எந்த வேறுபாடும் எங்களுக்கு தெரியவில்லை. டீ குடித்த பின் சிறிது நேரத்தில் மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.