திவுலுப்பிட்டிய 87 பேருக்கு கொவிட் 19!


 நாட்டில் நேற்றைய தினம் மினுவாங்கொடை – திவுலுப்பிட்டிய கொத்தணியில் மேலும் 87 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 23 பேர் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் 64 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை – திவுலுப்பிட்டிய கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 37 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் நிலைமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.



அதன்பின்னர் அவருடன் தொடர்புடையவர்களுக்கு கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அந்த வர்த்தக நிலையத்தின் 4 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது
.

இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையத்தின் 16 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கு நேற்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக அந்த சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் உள்ள 4 வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய 40 பி.சீ.ஆர் பேர் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவை தொடர்பான பெறுபேறுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.