இலங்கையில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை  3,385 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 851 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.