உத்தரப் பிரதேச மாநிலத்துணை முதல்வருக்கு கொரோனா!!
உத்தரப் பிரதேச மாநிலத்துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனடிப்படையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 இலட்சத்தைக் கடந்துள்ளதுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வைரஸ் காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உ.பி. மாநில பா.ஜ.க.தலைவர் ஸ்வந்திரநாத் தேவ் சிங், உ.பி.மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜல்பிரதாப் சிங் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தனர்.
மேலும், உத்தரப் பிரதேசத்தின் கேபினட் அமைச்சராக இருந்த கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துஅவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதலால்,என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை