கொவிட்-19 தொற்றிலிருந்து ரஷ்யாவில் பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர்!

 


ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து பத்து இலட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து இலட்சத்து இரண்டாயிரத்து 329பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 12இலட்சத்து 60ஆயிரத்து 112பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22ஆயிரத்து 56பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 11ஆயிரத்து 493பேர் பாதிப்படைந்ததோடு, 191பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமை இது நான்காவது முறையாகும்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 35ஆயிரத்து 727பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.