சிலாபத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

 


சிலாபம், அம்பகதவில பி​ரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், வேறு ஒரு நோய் காரணமாக சிலாபம் வைத்திசயாலைக்குச் சென்றிருந்த நிலையில் அவருக்கு சடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது வீட்டிலிருந்த வைரஸ் தொற்றாளர் இரணவில கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுகாதார நடவடிக்கையை முன்னெடுத்துள்ள சுகாதார அதிகாரிகள், அம்பகதவில பி​ரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் இரு பாதிரியார்கள் உள்ளடங்களாக அப்பிரதேசத்திலுள்ள ஐந்து குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.