கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்!

 


இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான ஆராய்ச்சி,  தடுப்பூசி உருவாக்குதல் பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகுக்குமான குறைந்த செலவிலான, எளிதில் கிடைக்கக்கூடிய பரிசோதனைகளை, சிகிச்சைகளை, தடுப்பூசிகளை, விரைவாக வழங்குவதற்கான உறுதிப்பாடு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதோடு கொரோனா பரிசோதனைகளையும், அதிகரிக்க வேண்டும். பெருந்தொற்றுக்கு எதிராக அதிகளவிலான ஆயத்த நிலை அவசியம்’ என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்குவோர் மற்றும் தயாரிப்போரின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர் மோடி, இது போன்ற அனைத்து முயற்சிகளுக்கும் அரசின் வசதிகளையும், ஆதரவையும் தொடர உறுதி அளித்தார்.

தடுப்பூசிகளுக்கான சுகாதார அமைச்சகத்தின் விநியோகம், விநியோக முறைகள், போதுமான கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான தொழில் நுட்பங்கள், விநியோகத்துக்கான குப்பிகளை நிரப்புதல், பயனுள்ள விநியோகத்தை உறுதி செய்தல் போன்றவற்றையும் அவர் இதன்போது ஆய்வு செய்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.