கொரோனா தொற்றாளர் முல்லைத்தீவில் அதிகரிப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது படைப்பிரிவு பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு பகுதி பகுதியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 6 சிறுவர்கள் அடங்கலாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை