மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சவேந்திர சில்வா!!

 


கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக அடுத்த 72 மணிநேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக, இலங்கையில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “திவூலப்பிட்டியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் கிட்டத் தட்ட ஆயிரத்து 500 தொழிலாளர்கள் பற்றிய கொரோனா பரிசோதனை அறிக்கைகள் பெறப்படும் என்பதால் இந்த காலம் மிகவும் முக்கியமானது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவிற்கு மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதிகளுக்கு கடந்த 7 நாட்களுக்குள் வருகை தந்த பலர் இருக்கலாம்.

அத்துடன் ஊழியர்களை சந்திப்பதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது. எனவே, இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரையில் எவ்வாறான நிலைமை என கூற முடியாது.

அத்தியவசிய தேவையின்றி வௌியே செல்லுவதனை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 72 மணித்தியலாங்களுக்குள் நாங்கள் இதனை இனங்கண்டு கொள்ளும் வரையில், யாரேனும் இப்பகுதிகளுக்கு வருகை தந்திருந்தால் அதனை ஒருபோதும் மறைக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.