சவேந்திர சில்வா மீதான பயணத்தடை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் கருத்து!!

 


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடை குறித்து மீளாய்வு செய்வதாக இலங்கை வந்துள்ள அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடந்த ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இந்த ஊடக சந்திப்பின்போது இராணுவத் தளபதி மீது காணப்படுகிற பயணத்தடை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மைக் பொம்பியோ, அமெரிக்காவில் உள்ள சட்டங்களுக்கு அமைய அவர் மீது பயணத்தடை விதித்திருப்பது யதார்த்தம் என்றாலும் அதன் சட்டரீதியான செல்லுபடி தன்மை குறித்து மீளாய்வு செய்வதாக பதிலளித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.