வெளிநாடுகளில் இருந்து மேலும் 18 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!!
கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகள் சிக்கித் தவித்த மேலும் 18 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார் நாட்டிலிருந்து 12 பேரும், அபுதாபியிலிருந்து 6 பேரும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கொரோன நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில், வெளிநாட்டலுவல்கள் அறிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மொத்தம் 508 பேர் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அந்த காலத்தை நிறைவு செய்து மொத்தம் 60,079 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அத்தோடு மேலும் 5,760 பேர் தற்போது தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை