யாழ். கோப்பாய் வீதியில் விபத்து!!

 


யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


தற்போது உயிரிழந்தவரின் சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.