மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!!
மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாள் ஆகியவற்றை, ஏறாவூர் பொலிஸாரிடம் குற்றவியல் பிரிவு ஒப்படைத்துள்ளது.
குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, இன்று காலையில் மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி.பண்டார தலைமையில், பொலிஸ் சாஜன் அஜித், சுதிமில்சன், பண்டார, சந்தன, விஜயசிங்க ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை சுற்றி சோதனையிட்டனர்
இதன்போது அங்கு பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் வாள் ஒன்றையும் மீட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை