கைகழுவுவதற்காக காத்திருக்கும் மக்கள்!!!
வவுனியா பிரதேச செயலகத்துக்கு சேவைகளைப் பெற்றுக் கொள்ளச் சென்ற பொதுமக்கள் கைகழுவுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தமையைக் காணமுடிந்தது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக அரச நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை என்பதால் அதிகளவான பொதுமக்கள் வவு னியா பிரதேச செயலகத்துக்கு தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ளச் சென்றிருந்தனர். இதனால் இந்த நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை