பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா!

 கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் பணியாளர்கள் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ரூவாண் விஜயமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியானவர்களில் சிலர் நடமாடியதாக கூறப்படும் பொறளை பகுதியில் உள்ள 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் 90 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 50 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.